Tuesday, April 30, 2013

நேசிப்பு மாறும்... | ஒரு உண்மையின் உணர்வு

நேசிப்பு மாறும்...

ஏதோ ஒரு காய்ப்பு மனதுள்
காரணங்கள் இன்றி தோன்றி
கோபமாய் உருண்டுக் கொண்டேயிருக்கிறது....

தட்டிவிடும் திசை மறுத்து
வெற்றிடமெங்கும் நிரப்பி
வெறுப்பை விதைக்கிறது...

நூலின் பிரிகளிடையே மாட்டிக்கொண்ட பூனையாய்
வெளிவரமுடியாத விளிம்பில்
என்னை நிறுத்திக் கைக் கொட்டிச் சிரிக்கிறது...

உணர்வுகளுடன் விளையாடி
உயரின் மூலத்தை சிதைத்து
முகங்களை மறக்கச் செய்கிறது...

வியாபித்து விரிந்த வானத்தை
அதன் நீள்மையை
நேசிக்க சொல்கிறது...

கருப்பு முகமூடிகளை மறந்து
கண்முன் விரிந்திருக்கும் இயல்பை
நேசிக்க வைக்கிறது...

நாதாரியாய்
பாபு நடேசன்