Friday, June 21, 2013

யூனியன் பிரதேசம் என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? விளக்கவும்.

ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்)(English: Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. 2005-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

அவையாவன:

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சண்டீகர்
தமன் தியூ
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
பாண்டிச்சேரி
லட்சத்தீவுகள்
டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரிக்கும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிக்கும் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்திய குடியரசு தலைவரால் நிர்வாககிக்கப் படுகிறது. பிற மாநிலங்களின் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசு தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுவைக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுக்கு சில சட்டம் இயற்றுவதில் குடியரசு தலைவர் ஒப்புதல் தேவை.

Tuesday, April 30, 2013

நேசிப்பு மாறும்... | ஒரு உண்மையின் உணர்வு

நேசிப்பு மாறும்...

ஏதோ ஒரு காய்ப்பு மனதுள்
காரணங்கள் இன்றி தோன்றி
கோபமாய் உருண்டுக் கொண்டேயிருக்கிறது....

தட்டிவிடும் திசை மறுத்து
வெற்றிடமெங்கும் நிரப்பி
வெறுப்பை விதைக்கிறது...

நூலின் பிரிகளிடையே மாட்டிக்கொண்ட பூனையாய்
வெளிவரமுடியாத விளிம்பில்
என்னை நிறுத்திக் கைக் கொட்டிச் சிரிக்கிறது...

உணர்வுகளுடன் விளையாடி
உயரின் மூலத்தை சிதைத்து
முகங்களை மறக்கச் செய்கிறது...

வியாபித்து விரிந்த வானத்தை
அதன் நீள்மையை
நேசிக்க சொல்கிறது...

கருப்பு முகமூடிகளை மறந்து
கண்முன் விரிந்திருக்கும் இயல்பை
நேசிக்க வைக்கிறது...

நாதாரியாய்
பாபு நடேசன்